22ம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றிருந்தது.
இதன்போது அதற்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் பிரயோகிக்கப்பட்டிருந்தன.
இதன்படி 22ம் திருத்தச் சட்டமூலம் 178 மேலதிக வாக்குகளால் அருதிப்பெரும்பான்மையுடன் (3இல்2 பெரும்பான்மை) நிறைவேற்றப்பட்டுள்ளது.
சரத் வீரசேகர மாத்திரமே சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்திருந்தார்.
Update
இதன்பின்னர் நடைபெற்ற மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுபில் அதற்கு ஆதரவாக 174 பேர் வாக்குகளை பிரயோகித்திருந்தனர்.
இதன்படி 22ம் திருத்தச் சட்டத்தின் மூன்றாம் வாசிப்பும் நிறைவேற்றப்பட்டது.