முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்கும் முயற்சி ஒன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இந்த திட்டத்துக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தனவை அந்த பதவியில் நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்சவை நியமிக்கும் நோக்கில் இந்த முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் இந்தத் திட்டத்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று அய்வரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தரப்பிலும் இந்த திட்டத்துக்கு வரவேற்பளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.