பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவரை பதவி நீக்குவதற்கான காரணங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனக ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்து அவர் இன்றைய தினம் நிதி அமைச்சுக்கு பதில் அனுப்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.