இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்ரமசிங்க ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்து.
இதுதொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் இது தொடர்பில் மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் தொழிற்சங்கவாதி ஆனந்த பாலித ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.