சுகாதார அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில் பணிப்புறக்கணிப்பை தொடர்வதாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர் சேவை உட்பட 18 சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் நேற்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தன.
எவ்வாறாயினும் விசேட வைத்தியசாலைகள், அவசர பிரிவுகள் வழமைபோன்று செயற்படுகின்றன.