இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டங்களுக்கு முகங்கொடுத்து வரும்நிலையில், எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நிதியமைச்சிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பெற்றோலின் விலையை 192 ரூபா படியும், டீசல் விலையை 169 ரூபாய்படியும் அதிகரிப்பதற்குப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர்அய்வரி செய்திக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் உடனடியாக எரிபொருள் விலை அதிகரிப்புக்கு வாய்ப்பு இல்லை.
ஆனால் இலங்கை- இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (LIOC) விலைக்கு ஏற்பபெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்கள் விலைஅதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் அய்வரி செய்திகளிடம்தெரிவித்தார்.