பிரதமர் பசிலா? | மீண்டும் அடிபடும் பேச்சு

2 years ago
Gossip
aivarree.com

பசில் ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கான முயற்சி திரைமறைவில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்தும் பேச்சு அடிபடுகிறது. 


தற்போது அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபக்ச அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரமளவில் இலங்கைக்கு வருவார் என்று தெரிவிக்கப்படுகிறது.


அவர் நாடு திரும்பியதுடன் அவரை பிரதமாக நியமிப்பதற்கான முயற்சியை மொட்டுக் கட்சியினர் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 


இதனை அண்மையில் அமைச்சர் பந்துள குணவர்தன மறுத்திருந்த போதும், இதற்கான முன்னெடுப்பு குறித்துத் தொடர்ந்தும் ‘பேச்சு அடிபட்ட’ வண்ணமே உள்ளது.