பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

12 months ago
Sri Lanka
aivarree.com

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 41 வயதுடைய மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபர், நீதிவானின் உத்தரவுக்கு அமைவாக எதிர்வரும் மே 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் பல தடவைகள் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஆறு மாணவர்களின் பெற்றோர்கள் இது தொடர்பில் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், ஏனைய மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாட்டினை மேற்கொள்ள முன்வரத் தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.