பதவி விலகுகிறாரா ஹரின் பெர்ணாண்டோ

2 years ago
Sri Lanka
aivarree.com

சுற்றுலாத்துறை அமைச்சுப் பதவியிலிருந்து விலகி, கரு ஜெயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் சேர எதிர்ப்பார்த்துள்ளதாக ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இது தொடர்பாக கூறிய விடயங்கள் :-

  • முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் சிரேஷ்ட்ட ஊடகர் விக்டர் ஐவன் ஆகியோரால் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் கோட்பாடு குறித்து தமக்கு விளக்கப்பட்டுள்ளது.
  • தற்போதைய நிலைமையில் நாட்டுக்கு இதுவே தேவையாக இருக்கும் திட்டமாகும்.
  • இன, மத, பேதங்களால் பிரிந்து போயுள்ள நாட்டின் அரசியல் கலாசாரம் மொத்தமாக பிழையானது.
  • ஒக்ஸ்ட் மாதமளவில் நாட்டின் நிலைமை சீரடைந்தால் அமைச்சுப் பதவியில் இருந்தும் அரசியல் வலயத்தில் இருந்தும் விலகி, அந்த அமைப்புடன் சேர எதிர்ப்பார்த்துள்ளேன்.