சுற்றுலாத்துறை அமைச்சுப் பதவியிலிருந்து விலகி, கரு ஜெயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் சேர எதிர்ப்பார்த்துள்ளதாக ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இது தொடர்பாக கூறிய விடயங்கள் :-
- முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் சிரேஷ்ட்ட ஊடகர் விக்டர் ஐவன் ஆகியோரால் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் கோட்பாடு குறித்து தமக்கு விளக்கப்பட்டுள்ளது.
- தற்போதைய நிலைமையில் நாட்டுக்கு இதுவே தேவையாக இருக்கும் திட்டமாகும்.
- இன, மத, பேதங்களால் பிரிந்து போயுள்ள நாட்டின் அரசியல் கலாசாரம் மொத்தமாக பிழையானது.
- ஒக்ஸ்ட் மாதமளவில் நாட்டின் நிலைமை சீரடைந்தால் அமைச்சுப் பதவியில் இருந்தும் அரசியல் வலயத்தில் இருந்தும் விலகி, அந்த அமைப்புடன் சேர எதிர்ப்பார்த்துள்ளேன்.