கொழும்பு பங்குச் சந்தையில் கடந்த 2 நாட்களில் 109 பில்லியன் ரூபாய் இழக்கப்பட்டுள்ளது.
பேரண்டப் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில் உள்ளது.
அண்மையில் 13000 புள்ளிகளைத் தொட்ட அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் செவ்வாய் அன்று 12,422 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது.
எவ்வாறாயினும் செவ்வாய்கிழமை ஒரு கட்டத்தில் 12,296 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்த அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண், நாளின் இறுதியில் 126 புள்ளிகள் மீளெழுந்து 12,422 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது.
இதன்மூலம் எதிர்வரும் நாட்களில் பங்குச் சந்தை வளர்ச்சிப் போக்கில் செல்ல வாய்ப்பு இருக்கின்றமை தெரிவதாக, துறைசார்ந்தவர்கள் கூறுகின்றனர்.