தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் நாளை (12) ஹட்டனில் வைத்து விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருப்பதாக செய்திகள் வெளியாக்கப்பட்டிருந்தன.
எனினும் இதனை அவர் முற்றாக மறுத்துள்ளார்.
அய்வரி செய்திகளிடம் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம், தாம் விசேட அறிவிப்பை வெளியிடவிருப்பதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று கூறினார்.
தமக்கும், ஏனைய மலையக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் மனக்கசப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகள் பகிரப்படுவதாகவும், அய்வரி செய்திகளிடம் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.