வெள்ளிக்கிழமை இரவு இரண்டு டீசல் கப்பல்களும், உலை எண்ணெய் கப்பல் ஒன்று என 3 கப்பல்கள் இலங்கை வருகின்றன.
அவற்றுக்கான கட்டணத்தை செலுத்த டொலர்களை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மறுபக்கம் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பல் ஒன்றில் இருந்து 38,400 மெற்றிக் டன் பெற்றோலை இறக்க 33 மில்லியன் டொலருக்கான நாணயக்கடிதம் திறக்க வேண்டியுள்ளது.
அதேநேரம் ஏற்கனவே டொலர் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட கப்பலில் இருந்து எரிபொருளை இறக்க முடியாத நிலையும் நிலவுகிறது.
எரிபொருளை தரை இறக்குவதற்காக இலங்கையில் உள்ள இரண்டு முனையங்களிலும் இரண்டு கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்படுவதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
- லங்காதீப