சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் மகளிர் அணி

11 months ago
SPORTS
aivarree.com

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி தொன்னாப்பிரிக்க மகளிர் அணியுடன் முதன் முறையாக சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.

அதன்படி, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, மூன்று டி:20 போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும்.

போட்டிகள் செப்டம்பர் 1 முதல் 14 வரை நடைபெறும்.

அனைத்து போட்டிகளும் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி பாகிஸ்தான் பயணமாகிறது.

தென்னாப்பிரிக்காவின் சுற்றுப்பயணம் செப்டம்பர் 1 முதல் 5 வரை மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடருடன் தொடங்கும்.

2022-25 ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் போட்டிகளுடன், செப்டம்பர் 8 மற்றும் 14 ஆம் திகதிகளுக்கு இடையில் ஒருநாள் தொடர் நடைபெறும்.

தற்போது புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா ஆறாவது இடத்திலும் உள்ளன.