முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பி இரகசிய தகவல் ஒன்று தொடர்பாக, சரத் பொன்சேகா கருத்து தெரிவித்துள்ளார்.
இணையம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சரத் பொன்சேகா தெரிவித்த விடயங்கள்.
- மே 9 சம்பவத்தின் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் கணவர் கபிதான் சேனக சில்வா ஊடாக கோட்டாபய ராஜபக்ச தகவல் ஒன்றை அனுப்பினார்.
- பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் கூறினார்.
- அதற்கு சில நிபந்தனைகளை நான் விதித்தேன்.
- பின்னர் அவர் தொலைப்பேசியில் அழைத்து பேசினார்.
- சரத் பொன்சேகாவை பிரதமராக நியமித்துவிடுவேன் என்ற அச்சம் மகிந்த மற்றும் சமலுக்கு இருப்பதாக சொன்னார்.
- அவருக்கும் அது ஒரு அச்சமாக இருந்தது என்பது எனக்கு புரிந்தது.