அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆம் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் ஜனாதிபதிக்கு நிதியமைச்சர் பதவி இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேற்படி சட்டமூலத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்று உள்ளது .
அதன் பிரிவு 44 (3) இன் படி, ஒரு அமைச்சுக்கு ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றால் ஜனாதிபதி அந்த அமைச்சின் செயல்பாடுகளை 14 நாட்களுக்குப் பொறுப்பேற்க முடியும் என்று உள்ளது .
எனினும் தற்போது ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக நிதியமைச்சர் பதவியையும் வகிக்கின்றார்.
எனவே 22ஆம் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் அவரிடம் உள்ள நிதி அமைச்சு இல்லாமல் போகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.