குடிநீர் கட்டணத்தைச் செலுத்தாத மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சட்டப்பிரிவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
எச்சரிக்கை விடுத்தும் அரசியல் தரப்பினர் தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களுக்கான நீர் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளனர்.
முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கட்டணம் செலுத்தாதவர்களது பட்டியலில் அடங்குகின்றனர்.