இன்னும் சில தினங்களில் எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய விலைமாற்றம் செய்யப்பட்ட வேண்டும்.
இதன்படி எரிபொருள் சிலவற்றின் விலைகளை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வலுசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அய்வரி செய்திகளுக்கு வழங்கிய தகவல் அடிப்படையில், டீசலின் விலை இம்முறை 10 ரூபாய் அளவில் அதிகரிக்கப்படலாம் என அறியக்கிடைத்தது.
எனினும் இந்த தீர்மானம் இறுதி நேரத்தில் மாற்றப்படலாம் என்றும் அவர் அய்வரி செய்திகளிடம் கூறினார்.
நாட்டு மக்களின் தற்போதைய மனநிலை அடிப்படையில், விலையைக்கூட்டுவது குறித்த தீர்மானம் ஆழமான ஆலோசனையின் பின்னரே எடுக்கப்படும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.