எரிபொருள் விநியோகத்தை குழப்பியவர்களின் அடுத்தக்கட்ட நகர்வு

1 year ago
Sri Lanka
aivarree.com

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட தொழிற்சங்கத்தினர் உட்பட 20 பெற்றோலிய ஊழியர்கள் குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இவர்கள் சந்திக்கவுள்ளனர்.

அதேநேரம் இந்த விடயத்திற்கு எதிராக பெற்றோலிய தொழிற்சங்கத்தினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட 20 பணியாளர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் திங்கட்கிழமை (03) ஆரம்பமாகவுள்ளன.