வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிப்பொருள் கோட்டாவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தலவல்கள் வெளியாகியுள்ளன.
முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் எரிப்பொருள் கோட்டாவை அதிகரிப்பதாக அமைச்சர் கஞ்சன ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஏனைய வாகனங்களுக்கும் வாராந்த கோட்டாவை அதிகரிக்க ஆலோசிக்கப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பயணிகள் பேருந்துகளுக்கான வாராந்த எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வலுசக்தி அமைச்சின் அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.