இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டவுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதி QR அமைப்பின் ஊடாக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்தார்.
இதன்படி, பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீற்றரும், ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும் எரிபொருள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கார் வகைக்கான ஒதுக்கீடு வாரத்திற்கு 40 லீற்றராக எரிபொருள் அதிகரிக்கப்பட்டுள்ளது.