எரிபொருட்களின் விலை குறையுமா? அமைச்சர் சொன்ன பதில்

2 years ago
Sri Lanka
aivarree.com

உலக சந்தையில் கடந்த சில நாட்களாக எரிபொருட்களின் விலை தளம்பல் நிலையில் உள்ளது.


தற்போது எரிபொருள் விலை குறைவடைந்திருப்பதாகவும், புதிதாக எரிபொருள் இறக்குமதி செய்யும் போது, அதன் விலைக்கு ஏற்ப உள்நாட்டில் விலை குறைக்கப்படுமா? என்றும் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றில் கேள்வி எழுப்பின.


இதற்குப் பதில் வழங்கிய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காமினி லொக்குகே, கடந்த பெப்ரவரி மாதம் நிலவிய விலைகளுக்கு அமைவாகவே தற்போது விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


மார்ச் மாதம் யுக்ரைன் யுத்தம் காரணமாக எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ளதால், விலையைக் குறைக்க முடியாதுள்ளது.


எதிர்காலத்தில் சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குறையுமாக இருந்தால், உள்நாட்டிலும் குறைக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.