‘எந்த நேரத்திலும்’ உக்ரைன் ஆக்கிரமிக்கப்படலாம் – வெள்ளை மாளிகை

2 years ago
World
aivarree.com

உக்ரைனில் ‘எந்த நேரத்திலும்’ ரஷ்யா படையெடுக்கும் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

எனவே அங்குள்ள அமெரிக்க குடிமக்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அறவுறுத்தப்பட்டுள்ளது.

வான்வழி குண்டுவீச்சுடன் படையெடுப்பு தொடங்கலாம் என்றும் இது அங்கிருந்து வெளியேறுவதை கடினமாக்குவதுடன், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை கூறியது.

எல்லைக்கு அருகே 100,000க்கும் அதிகமான துருப்புக்கள் குவிக்கப்பட்டிருந்த போதிலும் உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டத்தை மொஸ்கோ பலமுறை மறுத்துள்ளது.

இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து, லாட்வியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தங்கள் நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளன.