உள்ளாட்சி தேர்தல் திகதி 3ம் திகதி நிச்சயம் அறிவிக்கப்படும் | தே. ஆ. தலைவர் உறுதி

1 year ago
Sri Lanka
aivarree.com

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மார்ச் மாதம் 9ம் திகதி நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய தேர்தல் திகதி மார்ச் மாதம் 3ம் திகதி நிச்சயமாக அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.

அன்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கூடி தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டு நிச்சயமாக வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தேர்தலுக்கான நிதி ஒதுக்கம் தொடர்பில் பாராளுமன்ற சபாநாயகரின் தலையீட்டைக் கோரி, கடிதம் ஒன்று அனுப்பப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.