திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால், அதிகபடியான வன்முறைகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் தெரிவித்த கருத்துகள்:-
திட்டமிடப்படி தேர்தல் இடம்பெறும் என்ற நம்பிக்கை இல்லை.
அவ்வாறு தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் அது வன்முறைகள் நிறைந்ததாக இருக்கும்.
இந்த தேர்தல் அரசியல் கட்சிகளின் மக்கள் ஆணையை உறுதிசெய்வதற்கான கருத்துக் கணிப்பாக பார்க்கப்படுகிறது.
எனிவே கட்சிகள் தங்களது செல்வாக்கை உறுதி செய்துக் கொள்ள ஒன்றுக் கொண்டு மோதிக்கொள்ளும் நிலைமை உள்ளது.
அதேநேரம் தேர்தலுக்கு செலவாகின்ற பணம் குறித்த தகவல்கள் திரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.