எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இறுதியாக 2022 ஜூலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் முழங்காலில் காயம் ஏற்பட்டபோது, மிக நீண்ட காலம் ஓய்வில் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி இந்த தொடருக்கு திரும்பியுள்ளார்.
மொஹமட் ரிஸ்வான், அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், ஹசன் அலி மற்றும் நசீம் ஷா போன்ற முன்னணி நட்சத்திரங்களின் உதவியுடன் பாபர் அசாம் தலைவராக செயற்பட்டு அணியை வழி நடத்தவுள்ளார்.
ஜூலை 9 அன்று, பாகிஸ்தான் இலங்கை வருவதற்கு முன்னதாக சுற்றுப் பயணத்துக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிடப்பட்டுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளும் 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இருக்கும்.
பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான் (உப தலைவர்/ விக்கெட் காப்பாளர்), அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமட், ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், முகமது ஹுரைரா, மொஹமட் நவாஸ், நசீம் ஷா, நோமன் அலி, சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அகமட் (விக்கெட் காப்பாளர்), சவுத் ஷகீல், ஷஹீன் அப்ரிடி மற்றும் ஷான் மசூத்.