பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி நடக்கும் அரசுக்கு எதிரான பேரணியில் அவர் கலந்து கொண்டிருந்தார்.
குஜ்ரன்வாலாவில் உள்ள அல்லாவாலா சவுக்கில் உள்ள அவரது வரவேற்பு முகாமில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இன்ரான் கானின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.