இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ அவுஸ்திரேலியாவில் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளானார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20/20 போட்டியில் பினுர பெர்னாண்டோ 4 ஓவர்களில் 2-12 என்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பினுர பெர்னாண்டோவுக்கு நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதும், உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கப்படவில்லை.
முன்னதாக, இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியதும் குசல் மெண்டிஸ் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளானார்.
இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 3வது 20/20 போட்டியில் குசல் மெண்டிஸ் களமிறங்க வாய்ப்புகள் உள்ளன.
#நியூஸ்வயர்