ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தயாராகி வருவதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, கண்டி, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.