இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.
அண்மையில் சீமெந்தின் விலையும் அதிகரிக்கப்பட்டது.
தற்போது வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் டயர்களின் விலைகளை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உற்பத்தி செலவுகள் காரணமாக விலை அதிகரிப்பு செய்ய நேர்ந்துள்ளதாக, டயர் வர்த்தகர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.
இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.