பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான சுற்றறிக்கை திருத்தம் செய்யப்படவுள்ளது.
அதேநேரம், கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டோருக்கு தற்போதுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
மேலும், பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பஸ்கள், லொறிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை அடுத்த சில நாட்களில் மீண்டும் திருத்தப்படும்.
அநாவசிய பராமரிப்பு, உதிரி பாக, எரிபொருள் செலவுகள் இன்றி இலங்கைக்கு பஸ்கள் மற்றும் ட்ரக் வண்டிகளை இறக்குமதி செய்வதற்கான பயனுள்ள புதிய சுற்றறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
தெஹியோவிட்ட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.