இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை அமுல்படுத்துவதனால் இலங்கை பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
இன்று காலை இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு, இணையவழி பாதுகாப்பு தொடர்பில் ஆசிய இணையக் கூட்டமைப்பு (AIC) அண்மையில் வெளியிட்ட கவலைகளை சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
இலங்கையானது இத்தகைய பாரிய நிறுவனங்களை சீர்குலைக்கும் பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை எவ்வாறு ஊக்குவிக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எனவே, இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.