இன்றைய தினமும் நாட்டின் பல பாகங்களில் மழையுடனான வானிலை

1 month ago
Sri Lanka
aivarree.com

இன்று (29) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.