ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவர் புறக்கோட்டை மிதக்கும் சந்தையை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை இலக்காகக் கொண்டு புறக்கோட்டையில் மிதக்கும் சந்தை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாக டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத்தொடர்து, பொது-தனியார் பங்காளித்துவத்தின் கீழ் மிதக்கும் சந்தையை அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தால் முதலீடு செய்ய முடியவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர், நகர அபிவிருத்தி அதிகார சபை இதனை அபிவிருத்தி செய்ய முதலீட்டாளர்களை அழைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.