போலி இணையத்தளம் தொடர்பில் எச்சரிக்கை – குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிக்கை

2 weeks ago
Sri Lanka
aivarree.com

விசா பெற்றுக்கொள்வதற்காக போலி இணையத்தளம் ஊடாக பணம் செலுத்தப்படுகின்றமை தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய விசா முறைமைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள www.srilankaevisa.lk இணையத்தளத்தினை போன்று போலி இணையத்தளம் ஊடாக சிலர் பணம் செலுத்துகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே Online ஊடாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் e visa பகுதியை மாத்திரம் பயன்படுத்துமாறு திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.