விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொசான் ரணசிங்கவின் பதவி ஜனாதிபதியால் இன்று பறிக்கப்பட்டது.
சிறிலங்கா கிரிக்கட் தொடர்பாக அவர் எடுத்த தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து அவருக்கு பதிலாக புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
எனினும் விளையாட்டுத்துறை அமைச்சு ஹரேன் பெர்ணாண்டோவிடம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெற்றிடம் ஏற்பட்டுள்ள அமைச்சுப் பதவியை ஆளும் கட்சியில் ஒருவருக்கா அல்லது எதிர்கட்சியில் இருந்து அரசுடன் இணைகின்ற ஒருவருக்கா வழங்குவது? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.