ஹொரணையில் துப்பாக்கிச் சூடு

2 weeks ago
Sri Lanka
aivarree.com

ஹொரணை, கிரேஸ்லேன்ட்வத்தை பகுதியில் இன்று (05) முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சொகுசு கெப் ரக வகனத்தில் பயணித்த நபரொருவர் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றரைம குறிப்பிடத்தக்கது.