நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (05) அதிக அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் “அதிக அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலையில் காணப்படக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம்அறிவித்துள்ளது.