அம்பாந்தோட்டையில் புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீனா பெற்றோலியம், இரசாயன கூட்டுத்தாபனத்திற்கு (SINOPEC) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (27) சினோபெக் குழுமத்திற்கு வழங்குவதற்கான தொடர்புடைய ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.