ஷகிப் புதிய மைல்கல் சாதனை

1 year ago
SPORTS
aivarree.com

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல்-ஹசன் புதிய மைல்கல் சாதனையொன்றை படைத்துள்ளார்.

சாட்டோகிராமில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போதே 35 வயதான ஷகிப் இந்த மைல்கல் சாதனையினை பதிவுசெய்துள்ளார்.

இப் போட்டியில் ஷகிப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது நாட்டுக்காக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பங்களாதேஷ் வீரர் என்ற பெருமையினை அவர் பெற்றார்.

இதனால் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட்டின் நம்பர் வன் சகலதுறை வீரரான ஷகிப் அல்-ஹசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.