யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்த நிலையம் மீது இனந் தெரியாத நபர்களினால் நேற்றிரவு வெடி குண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வெடி குண்டானது வாகன திருத்த நிலையத்தில் தரித்திருந்த காரொன்றின் மீது வீழ்ந்து வெடித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடி குண்டானது உள்ளூர் தயாரிப்பாக இருக்கலாம் என்றும், அது பாரியளவில் சேதம் விளைவிக்கக்கூடியது அல்ல என்றும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறெனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.