ரணில் – மகிந்த சந்திப்பு | பரபரப்பில் இலங்கை அரசியல்

1 year ago
Gossip
aivarree.com

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு மூடிய அறை சந்திப்பாக இடம்பெற்றதாக தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இதன்போது பல முக்கியமான கரிசனைக்குரிய விடயங்கள் குறித்து, மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதிக்கு எடுத்துரைத்ததாக அய்வரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இருவரும் மீண்டும் சந்தித்து இந்த விடயங்கள் குறித்து ஆராய இணக்கம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி ரணில், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அழைப்பை விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.