வறட்சி காரணமாக 4000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

2 weeks ago
Sri Lanka
aivarree.com

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 1,542 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கேகாலை மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வரகாபொல, ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட, கலிகமுவ மற்றும் கேகாலை ஆகிய பிரிவுகளில் 646 குடும்பங்களைச் சேர்ந்த 2,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.