ஜனாதிபதி அரசியலமைப்பின் சட்டத்தை அவர் மீறி செயற்பட முடியாது – நளின் பண்டார

2 weeks ago
Sri Lanka
aivarree.com

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விரைவில் இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினாலும் தடுக்க முடியாது.

அரசியலமைப்பின் சட்டத்தை அவர் மீறி செயற்பட முடியாது.

நாட்டு மக்களின் நலனுக்காக செயற்படக்கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.