சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இம்மாதம் 20ம் திகதி அங்கீகரிக்கப்பட்டால், 22ம் திகதி இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிதி கிடைத்ததன் பின்னர் அமைச்சரவை மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போதே அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்கு பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெறும் வரையில் புதிய அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்பதில் ஜனாதிபதி திட்டவட்டமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.