சர்ச்சைக்குரியவராக மாறியுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகரவை நீக்கி புதியவர் ஒருவரை நியமிப்பது குறித்து ஜனாதிபதி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் இந்தத் துறைச்சார்ந்த பிரச்சினைகளை சுமுகமாக கையாளுவதற்கு தகுதியான ஒருவரை நியமிக்குமாறு, ஜனாதிபதி நெருக்கமானவர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கஞ்சன விஜயசேகர அமைச்சருக்கு எதிராக பல்வேறு முறைபாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் அய்வரி செய்திகளிடம் தெரியப்படுத்தின.
விரைவில் இந்த மாற்றம் நிகழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.