பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த தினம் பிணையில் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதிலிகே அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தாம் சிறையில் இருந்த போது தம்மை கொலை செய்ய பொலிசார் முயற்சித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கண்களை கட்டி நவகமுவ தேவாலயகத்துக்கு அருகில் அழைத்துச் சென்றதாகவும், தம்மை அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரி இன்னொருவரை தொலைபேசியில் அழைத்து, ‘சேர் நான் இடத்துக்கு வந்துவிட்டேன், இனி என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டதாகவும் வசந்த முதலிகே கூறியுள்ளார்.
எனினும் சிறிது நேரத்தில் அவர் தம்மை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சிறைக்குச் அழைத்துச் சென்றதாகவும் முதலிகே குறிப்பிட்டுள்ளார்.