கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள முன் பள்ளியொன்றில் மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பக்கெட் பாலினை பருகிய 13 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக மாவட்ட வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு திட்டத்தின் கீழ், நிறுவனமொன்றே பொதியிடப்பட்ட பால் பக்கெட்டுகளை வழங்கியுள்ளது.
அதனை பருகிய பின்னரே மாணவர்கள் மயக்கம், வயிற்றோட்டம் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்பதை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
எவ்வாறெனினும் பால் பக்கெட்டின் மாதிரிகள் கொழும்பில் உள்ள வைத்திய ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.