தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை

2 weeks ago
Sri Lanka
aivarree.com

தாதியர் மற்றும் பல சுகாதார சேவை பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் காமினி வலேபொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெறும் வயதை 61 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பத்திரன மேலும் தெரிவித்துள்ளார்

இதேவேளை, சுகாதார சேவைகளுக்கு புதிதாக 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள 1,000 வெற்றிடங்களை நிரப்புவதாகவும் அமைச்சர் கூறினார்.