இராஜாங்க அமைச்சர் டயனா கமகவே இலங்கை பிரஜை அல்லவென்றும், அவர் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அவரது பிரஜா உரிமை மற்றும் பாராளுமன்ற உறுப்புரிமை ஆகியவற்றை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பிரஜாவுரிமை கொண்ட அவர், போலி ஆவணங்களைக் கொண்டு இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவர் இலங்கைப் பிரஜை இல்லை என்று உறுதியாகியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படும்.