ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
பணத்தைக் கொடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்குவாங்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தி இருந்தார்.
இதுதொடர்பாக பண்டாரகமவில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, தமக்கு சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர் தெரிவித்த கருத்துகள்.
- 2015ம் ஆண்டு நாங்கள் ஆளுந்தரப்புக்கு சென்றதன் காரணமாகவே சஜித் பிரேமதாசவுக்கு முதன்முறையாக அமைச்சராக முடிந்தது.
- அது அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.
- சிலருக்கு நாங்கள் கட்சி மாறுவது பணத்துக்காக என்பது போன்று தெரியும்.
- ஆனால் நாங்கள் அரசியலுக்காகத்தான் அந்தத் தீர்மானத்தை எடுக்கிறோம்.
- பணத்துக்காக சிலர் மாறக்கூடும்.
- ஆனால் அரசியலுக்காகவும் அவ்வாறான தீர்மானங்களை எடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
- இவ்வாறான தீர்மானங்களை சிலர் எடுப்பதன் காரணமாக, இன்னும் சிலருக்கு பயன் கிடைக்கிறது.